தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, March 14, 2009

கவிதைகள்

1.நகர்க் குருவி
வீட்டில்முற்றம் வரை
திரும்பும்தவிட்டுக் குருவிகளை
ஊரிலிருந்து திரும்புகையில்எடுத்துப் போகச்சொன்னார்கத்திரி மேட்டிலிருந்துஅறுவடையின் போது கொண்டு வந்துசின்னப்பா பின்னிக்கொடுத்தநெற்கதிர்களை
வாஸ்து மணி கட்டுவதற்காகபொறியாளர் அமைத்தவளையத்தில் தொங்கவிட்டுகண்காணிக்கையில்வினோதமாகவே பார்க்கின்றனநகரத்து.

2.மேல் நிலையாக்கம்
ஆடு பன்றி வெட்டித்தான்ஆண்டுக்கொரு முறைபூசை நடக்கும் ஆகாச வீரனுக்கு
மிச்சமிருப்பதைப்பகிர்ந்து கொள்வோம் பத்து வீட்டு பங்காளிகளும்
சாமி கிடா வயலில் மேய்ந்தால்அடிக்காமல் விரட்ட வேண்டும்இது அறியாப் பிள்ளைகளும்அறிந்ததுதான்
வீரியழும் குழந்தைகளைவீரம்பண்ணியென்றுதான்ஆச்சிகள் திட்டுவர்
பற வீரன் கோயிலில்கிடா வெட்டி காது குத்தும்மொட்டையன் மகன்ஆண்டைக்கும் எடுத்து வைப்பான்அரைக்கிலோ பச்சைக்கறி
ஆடு மாடுகளைபுசிக்க அனுமதிக்கிறதுவேத ஆகமம்
மாற்றுகளைத் தேடும் நீதி அரசர்களோபூசணிக்காய்களைப் பரிந்துரைக்கின்றனர்
எமது பிள்ளைகளுக்குக்கற்பிக்கப்படுகிறதுபலி பூசையை விடவும் பால் பூசை சிறந்ததென்று
அன்றுதொல்தமிழர் வீடுகளில்ஆட்டுக்கறி தின்றஎங்கள் முருகன்இன்று பழனியில்பஞ்சாமிர்தம் உண்டுநாக்கு செத்துக் கிடக்கிறான்
இனிபூசாரிகளின் தோள்களில்பூணூல் தொங்கஎங்கள் மாரியாத்தாள்மெல்ல மாறுவாள்அருள்மிகு மாரியம்மனாய்.
3.பரிகாசம்
அந்த அத்தையோடஆடு மேய்க்கப் போனாமானம் போவும்"சாண்ட குடிச்ச மறுமொவன.."தெனம் இதே வேலதான்ஒரு நாள்"சாண்டு போற எடமெல்லாம்சால் போட்டு மீன் புடிச்சுடுவன்"சின்னம்மாசொல்லிக் கொடுத்ததசொன்னேன்வாயத் திறக்கணுமேஅத்த..!
என்னத்த வெதைக்க
நெல்லறுத்த கொல்லையிலஎள்ளு வெதைக்கலாம்னாஎள்ளு வெதைச்ச கொல்லையிலகொள்ளு கூட மொளைக்காதாம்கரும்பு போடலாந்தான்ஒரம் வெலைய நெனைச்சாலேசக்கரையும் கசக்குதேகரம்பா போட்டாலும்கணராவி வரியகட்டித் தொலைக்கணுமேன்னுஉளுந்து பயிரு வெதச்சுபுட்டேன்பயிர வெதச்சுமயிர புடுங்கறதான்னுபங்கத்த வாங்குறான்பங்காளி.

------------
4. மீன்கள்
-------------
அந்த காலத்துலயுந்தான்வெள்ளம் வரும்கொல்லையில வெறகால்தண்டிய வடிகட்டுனாதட்ட காலுல மீனுவோ கடஞ்சிருக்கும்அரவம் படாத போயிநோவாத அமுக்குனாவெறாகொறவகெளுத்திமடவகெண்டன்னு..சாக்குல கட்டிகிட்டு வருவோம்அடடா...அர்ச்சுனர் சொல்லஎச்சி ஊர ஊரக் கேப்போம்எல்லாம் எங்க தாத்தா போச்சி?ஒரம்ஊரியாபூச்சி மருந்துன்னுவக்காளோழிகொல்லைய நாசம் பண்றானஎப்புடி தங்கும்?5.ஆண்களுக்கு சமமாய்
களை வெட்டமண் அணைக்கஅறுப்பு அறுக்ககட்டு தூக்கவைக்கோல் திரைககூககருப்பம்புள் தூக்கஅண்டை வெட்டகான் பரிக்கவாறகு உடைக்கநெல் தூற்றவாய்க்கால் செத்தகட்டட வேலை செய்யஎல்லாவற்றையும்ஆண்களுக்கு சமமாய்செய்ய வரும்அவர்களைப்பெண் எனப் பிரித்துக் காட்டுவதுஅந்தகூலி மட்டுந்தான்.
6.தாத்தாவின் பறி
பெரிசும் சிறுசுமாய்இரண்டு திறப்புகள்சிறு திறப்பைவைக்கோல் சுருணை அடைத்திருக்கபெரிய வாய்நீரோட்ட திசைக்கு எதிராய்கன்னி வாய்க்காலில்பொழுது சாய வைத்து விடுவார்தாத்தா மூங்கில் குச்சுகளால்தான் பின்னிய பறியை.
விடிகாலை எழுந்து ஓடுவோம்மீன்களுடன் பறியிலிருந்து உதிரும்பாம்பு, நண்டுகளைக் காணதுள்ளத்துடிக்கும் மீன்களைகாணிகள கல்லில் செதிலெடுத்துகவுச்சி சட்டியில் கொதிக்க வைத்துஇறக்கும் போதுஎச்சில் ஊரச் செய்யும்ஆயாவின் கை நேர்த்தி.
பறிபரண் மேல் கிடக்கவரண்டு கிடக்குதுகன்னி வாய்க்காலும்வீராணம் ஏரியும்.இன்று சேதியூரில்குளிக்கும் குளத்தில்சாணியும் யூரியாவும் போட்டுஆச்சி புள்ள ஆயி மகன்வளர்க்கிறார்கட்லா, மிருகலா, ரோகுபோய் சேர்ந்துவிட்டனர்தாத்தாவும் ஆயாவும்.
7.தீபகற்பமும்
நீங்களும்
நாங்களும்ஒன்றுதான்
உங்களை மூன்று பக்கமும்எங்களை நான்கு பக்கமும்சூழ்ந்துள்ளது நீர்
நீங்கள் பேசுவதும்நாங்கள் பேசுவதும்செம்மொழியைத்தான்
உங்களுக்கு மேகங்களும்எங்களுக்கு வானூர்திகளும்பொழிகின்றனமழைக் குண்டுகளை
நீங்கள் இலக்கியங்களில் படிக்கிறீர்கள்நாங்கள் இல்லங்களில் எதிர்கொள்கிறோம்போர்க்களக் காட்சிகளை
உங்கள் குழந்தைகள்தீபாவளி வெடியோசையைச் சகிக்க இயலாமல்படுக்கையறைக்குச் செல்கின்றனர்எங்கள் குழந்தைகள்தினசரி வெடியோசையைச்சகிக்க இயலாமல்பதுங்கு குழிக்குச் செல்கின்றனர்
நீங்கள் பொங்கலைப் பொங்குகிறீர்கள்இங்கு நாங்களே பொங்குகிறோம்
அன்று தோட்டாக்கள் பன்றியின் கொழுப்பில் தோய்ந்தனசிப்பாய்க் கலகம் பிறந்ததுநீங்கள் விடுதலை பெற்றீர்கள்இன்றுதோட்டாக்கள்எங்கள் குருதியில் நனைந்தனபுலிகள் பிறந்தனர்நாங்களும் விடுதலை பெறுவோம்
நீங்களும் நாங்களும்ஒன்றுதான்.
-8.மரண அறிவிப்பாளன்---------------------------------
கொஞ்சமும் வருத்தமின்றிஉரத்து அறிவிக்கிறான்ஊரார் மரணத்தைஒலிப்பெருக்கி உதவியோடு
எழுத்துகளின் மாத்திரை நீட்டிஅழுத்தம் திருத்தமாகவெளிப்படும் சொற்கள்நம்மையும் கொல்லத் துணிவன
ஒருமுறை மட்டும்மரணமடைந்தவர்களைதன் அறிவிப்பில்ஒவ்வொரு முறையும்மரணமணையச் செய்கிறான்
இறந்தவர் வகித்த பதவியைச் சொல்லிஉறவுமுறைச் சொல்லிஇறுதிச்சடங்கு நடைபெறுமிடத்தையும்சொல்லிச் செல்கிறான்ஊர்கள் தோறும்மரணங்களால் வாழ்பவன்.
9.இளநீரை விற்பவன்-------------------------------
எல்லா திசைகளிலிருந்தும்நகருக்குள் நுழைகின்றனமிதி வண்டிகள்இளநீர்க் குலைகளைச் சுமந்தபடி
பொசுக்கும் வெக்கையில்வியர்வை வழியதாகத்தோடு காத்து நிற்கின்றனர்தென்னை மரங்களைப்போல்மூலை முடுக்குகளெங்கும்கைக் குழந்தையெனதாங்கிப் பிடித்து சீவுகிறான்கடைசி இளநீரை
வியாபாரம் முடிந்த மகிழ்வோடுவீடு திரும்பும் முன்அவன் வாய்க்குள் பொழிகிறது மழைதண்ணீர் பொட்டலம் உடைந்து.

No comments:

Post a Comment