'எச்சரிக்கைகள் ஏமாறும்'-கதை மூலம் 90 களில் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி பிரியதர்சினி. அதனைத்தொடர்ந்து அவர் எழுதிய கதைகள் மறந்து போன குரல்கள் என்னும் தொகுப்பாக 2000 இல் வெளியானது.இந்நூலுக்கு சேலம் நாகப்பன் ராசம்மாள் இலக்கிய விருது வழங்கப்பட்டது. தொகுப்புக்கு வந்த விமர்சனங்கள் இவரது எழுத்தை செழுமையாக்க உதவின. கவிதைகளின் மீது தன் கவனத்தைத் திருப்பிய கீதாஞ்சலி மாற்று, உயிரெழுத்து, புதிய பார்வை போன்ற இதழ்களில் கவிதை எழுதி தன் படைப்புகளை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டார். 2008 இல் 'அவனைப்போல் கவிதை ' நூல் வெளியானது. அந்நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது கிடைத்தது. இவரது இலக்கியப் பயணத்தில் நல்லதொரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் கவிஞர் பிரம்மராஜன். அவர் நிகழ்த்திய 'பெண் எழுத்தாளர் இலக்கிய சந்திப்பு 2000'- கருத்தரங்கு பல புதிய படைப்பாளிகளை அறிமுப்படுத்தியது. கீதாஞ்சலியின் கவிதைகள் அவர் சூழலில் வாழும் அசலான மனிதர்களை அவர்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டவை. "நான் அறிந்த சமூகத்தில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையில் கண நேரம் வந்து போன நிகழ்வுகளின் பாதிப்பால்தான் இத்தகைய கதைகளை எழுதினேன்" என்று கூறும் கீதாஞ்சலியின் படைப்புகளில் நுட்பமான அழகியல் இழையோடுவதை நாம் உணரலாம். கீதாஞ்சலியின் கவிதைகளில் குறிப்பிடத்தக்க அம்சமாக வார்த்தைச் சிக்கனம் காரணமாய் விளையும் இறுக்கத்தைச் சொல்லலாம் என்கிறார் பிரம்மராஜன். விழி பா.இதயவேந்தனும் அன்பாதவனும் தொகுத்துள்ள பெண் படைப்புலகம் இன்று என்றநுலில் கீதாஞ்சலி எழுதியுள்ள கட்டுரை சிறந்த திறனாய்வு நோக்குடன் பெண் படைப்புகளை மதிப்பீடு செய்வதாக அமைந்துள்ளது. இவரிடமிருந்து பல புதிய படைப்புகள் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இவரது எழுத்துகள் ஏற்படுத்துகின்றன.
கீதாஞ்சலியின் கவிதையில் ஒரு பகுதி
"ஒரு குவளை நிரம்பும்குளிர்ந்த தண்ணீருக்கெனமீன்களுடன் நிறைந்திருக்கும்இந்த ஆற்றைத் தரமுடியுமாவிறகுக்கெனஇருள் கவியும் வனங்களை."
அச்சமில்லை இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம். http://tamilmanam.net
கீதாஞ்சலியின் கவிதையில் ஒரு பகுதி
"ஒரு குவளை நிரம்பும்குளிர்ந்த தண்ணீருக்கெனமீன்களுடன் நிறைந்திருக்கும்இந்த ஆற்றைத் தரமுடியுமாவிறகுக்கெனஇருள் கவியும் வனங்களை."
அச்சமில்லை இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம். http://tamilmanam.net