தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, January 16, 2010

பிச்சாவரத்தில் ஓர் ஓவியக் கண்காட்சி






ஓவியர் தமிழரசன் ஈரநிலம் அறக்கட்டளையின் மூலம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டி தமிழக அளவில் ஓவியக்கண்காட்சி நடத்தி வருகிறார். 2010 சனவரி 1 ஆம் நாள் கன்னியாகுமரியில் தொடங்கி 16 ஆம் தேதியான இன்று கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் இக் கண்காட்சி நடைபெற்றது.இது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இன்று கண்காட்சியை கவிஞர் அறிவுமதி தொடக்கி வைத்தார். கிள்ளை ஊராட்சித் தலைவர் இரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், ஆறு.இளங்கோவன், ரெங்கப்பிள்ளை, பிரதீப் ஆகியோர் சென்றிருந்தோம். காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியங்கள் பல காண்போரின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருந்தன. தாயின் வயிற்றில் கருவைக் காப்பது போல் நாம் இந்த உலகைக் காக்கவேண்டும் என்னும் சிந்தனையை ஒரு படமும் பசுங்காடுகள்தான் இவ்வுலகைக் காக்கும் பாதுகாப்பு அரண்கள் எனபதை ஒரு படமும் நமக்கு உணர்த்தின.

சுற்றுலாத் துறையினர் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். சிதம்பரம் மாலைக் கட்டித்தெரு பள்ளி மாணவர்களும் பிரம்பகுமாரிகள் இயக்கமும் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தினர்.சூழல் சுற்றுலா மையமாக பிச்சாவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அத்துறை செயலர் இறையன்பு அவர்களின் முயற்சி. இதனை விழாவில் பேசியபோது அண்ணன் அறிவுமதி பாராட்டினார்.

படகில் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக பயணித்து பறவைகளைக்கண்டு மகிழ்ந்து ரசித்தபடி திரும்பினோம்.

No comments:

Post a Comment