தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, January 25, 2010

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்




கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற உள்ளது.
தொடக்கவிழாவில் வரவேற்புரை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் காந்திமதி.
அறுமுக உரை முனைவர் பரிமளம், தலைமை முனைவர் கே.எம்.சின்னதுரை, சிறப்புரை முனைவர் சி.மா.இரவிச்சந்திரன், நன்றியுரை பேராசிரியர் கமலா.
வல்லாளர் அமர்வில் முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் இரத்தின.புகழேந்தி, முனைவர் மா.கிருபாகரன் ஆகியோர் கட்டுடரை அளிக்கின்றனர். இணை அமர்வுகள் முனைவர் செல்வி, முனைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெறுகின்றன.
மாலையில் முனைவர் எழிலவன், முனைவர் பத்மாவதி, முனைவர் பிரான்சிஸ் சேவியர், முனைவர் இரவி, முனைவர் லட்சுமி, முனைவர் டாக்டர் நசீம்தீன் ஆகியோர் வல்லாளர் அமர்வில் கட்டுரை அளிக்கின்றனர். பேராசிரியர்கள் கமலா, கந்தசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் கட்டுரை அமர்வுகள் நடைபெறுகின்றன.
நிறைவு விழாவில் பேராசிரியர் ஜோதிலதா வரவேற்க முனைவர் சீலா ராமச்சந்திரன் தலைமையில் முனைவர் ஆறு.இராமநாதன் சிறப்புரையாற்ற கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. பரிமளம் நன்றி கூறுகிறார்.

No comments:

Post a Comment