தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, May 30, 2011

கடித இலக்கியம் - பொள்ளாச்சி நசன் கடிதம்




பொள்ளச்சிநசன்
16/9/94

அன்பு நண்பருக்கு ,

வணக்கம். தங்களின் 'மண்கவுச்சி' நூல் கிடைத்தது. பின் அட்டையில் இருப்பது தங்களின் புகைப்படம் என்று நினைக்கிறேன், சரிதானே! களம் வெளியீடாக நான் பிறந்த ஊரான சிதம்பரத்தின் சபாநாயகம் அச்சகத்தில் அச்சடித்ததாக - சிறுகதை ,கவிதை, நேர்காணல், விடுகதை எனப்பல்சுவையோடு கூடிய இத்தொகுப்பு ஒரு மாறுபட்ட முயற்சிதான். என் கவனத்தை ஈர்த்தது ப.அருள் - அவர்களின் கடிதம். தாங்கள் டி.ட்டி.எட்., படித்திருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதும் இண்டேனல் ஹிச்ட்ரி, சைக்காலஜி - 2 மார்க் பற்றியும் படிக்கும் போது நான் தங்களின் முதுகில் தட்டிக்கொடுப்பதுபோல் உணர்ந்தேன், ஏனெனில் நான் டி.ட்டி.எட் சைன்ஸ் லெக்சரர், ஆசிரியருக்கு அனைத்து கலைகளையும் சொந்தமாக்கி - விண்ணில் பறந்து - சமுதாயத்தைச் சாடி, இப்படி பன்முகத் தோற்றம் காட்டுவது சிறப்பானது, உயிரூட்டுவது. நூலைப் படித்து முடித்தபோது எங்கோ கிளம்பி எங்கோ சென்று இறங்கியது போன்று ஒரு எண்னம். அன்னப்பூ - கதையிலே நவீன சாதனங்களின் வளர்ச்சியினால் அடையும் சுகத்திற்கு அடியில் மறைந்து கிடக்கும் சோக நிகழ்வைக் காண முடிகிறது அந்த நல்ல உள்ளத்தை பைத்தியக்காரியாக, ராசியானவள் உள்ளுக்குள் நினைத்தாலும் ஏதும் செய்யமுடியாத ஏதிலிகளுக்கிடையில் வாழும் சாதாரண - எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகக்காட்டும் போது மகிழ்ந்தேன். எழுதப்படாத, எழுதப்படுவதற்கு அப்பாற்பட்ட, எழுத்தே அறியாத- அந்த உலகம் வெளிச்சம் போட்டு காடப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த நூல் காட்டுகிறது. இது ஒரு வெற்றிதான். தனியொரு மனிதனின் படைப்பிலக்கியம் என்று சுட்டிக்காட்டி, பட்டும், பாராட்டும் - பெற்றுவாழும் போலிகளுக்கிடையில் தனி மனிதனை முதன்மைப் படுத்தாது - பலரின் படைப்பு வழி- கருத்து வழி - ஒரு சமுதாய சிக்கலை, சீரழிவை, சிதைவை - காட்டுவது பாராடப்பட வேண்டிய ஒன்று. கால் காணி கரும்புக் கணக்கு - யோசிக்க வைக்கும் - செருப்பு, காணாமல் போன பணமும் நெய்வாசல் சோசியமும் - கதைகளும், ஆண்களுக்கு சமமாய், பாதுகாத்தல் கவிதைகளும் பளிச் எனத்தெரிகின்றன. விடுகதையும் - விடையும் ரசித்தேன் விடை இல்லாது இருந்திருந்தால் ஏதேதோ தோன்றியிருக்கும். நல்ல முயற்சி. தொடர என் வாழ்த்துகள்

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்.