தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, October 24, 2011

தீபாவளி - மாறி வரும் கொண்டாட்ட முறைகள்.



'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள்  ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
இவை எல்லாமே புராணப் புளுகுகள் என்று பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்திவிட்டார் என்றாலும் மக்களிடையே இக்கொண்டாட்ட மரபு இன்றும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள் சமணர்களும் கூட ஈப்பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
, தங்கக் கோயில் கட்டுமான பணிகள் 1577-இல் இத்தினத்தில்தொடங்கியதால் சீக்கியர்கள் இந்நாளில் தீபாவளியகக் கொண்டாடுகின்றனர்.
மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, தீபாவளியாக சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
தீபாவளி கொண்டாட்டம் என்பது இன்று முற்றிலும் வணிகமயமாகிவிட்டது. சில காலங்களுக்கு முன்பு வரை ஆடை வணிகம் மட்டுமே தீபாவளிக்குக் கொடி கட்டிப் பறந்தது. இன்றோ சகல துறைகளும் தீபாவளிக்கு தங்களின் வியாபாரத்தில் இயன்ற வரை லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகள் குழந்தைத் தொழிலாளர்களை வதைத்து தங்களின் வணிகத்தை விரிவாக்கி பல கோடிகளை லாபமீட்டுவதும் , சுற்றுச்சூழல் பற்றியெல்லாம் கவலைப்படாத நூர்பாலைகள் ஜவுளியில் லாபம் பார்ப்பதும், மக்கள் தங்களின் பாரம்பரிய பலகாரங்களை வீட்டில் செய்த நிலை மாறி அனைத்து வகை இனிப்புகளையும்  இனிப்பகங்களில் வாங்கிக்கொள்ளும் சோம்பேறிகளாக, காட்சி ஊடகங்கள் தீபாவளி ஸ்பெஷல் என்று மக்களை வீடில் முடக்கிப்போட, பத்திரிகைகள் தீபாவளி சிறப்பிதழ்கள் மூலம் தங்களின் வணிகத்தில் கண்ணும் கருத்துமாக, தங்கவிற்பனையும் குறைவில்லை (விலையும் குறைவில்லைதான்) இப்படி தீபாவளிப் பண்டிகை என்றால் அது முற்றிலும் வணிகம் மட்டுமே என்ற நிலைக்கு வந்துவிட்டது. இவை ஒரு புறமிருக்க, நினைத்தால் புத்தாடை, அன்றாடம் பலகாரம், மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து பகிர்ந்து கொள்வது என வாழ்க்கையே சிலருக்கு தீபாவளியாகிவிட்டது.
ஆனால் ஏழ்மை நிலையில் கிராமங்களில் வழும் பாமர மக்களுக்கு இவை அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை வரும் தீபாவளியில் மட்டும்தான் சாத்தியம் என்பதால் ஒருமாதத்திற்கு முன்பே தீபாவளிக்கு தேவையானவற்றைத் திரட்ட வேண்டிய நிலை அவர்களுக்கு.

தீபாவளிக்கு திபாவளி எண்ணை தேய்த்துக் குளிப்பவர்களும் புத்தாடை உடுத்திக்கொள்பவர்களும் கிராமங்களில் இருக்கின்றனர். ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இந்தசமூகத்தில் குழந்தைகளுக்கு வேண்டுமானால் தீபாவளி மகிழ்ச்சியாக இருக்கலாம். ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோர்களுக்கு தீபாவளியன்றாவது தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே என்ற கவலைதான் மிகுதி.
 

 
 பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள் இவை தீபாவளியின் தனித்த அம்சங்களாக இருந்தன ஒருகாலத்தில். இன்று நினைத்தால் பத்தாடை வாங்குகிறோம் , தினந்தோறும் பலகாரம்என விழாவின் அனைத்து அம்சங்களும் சில நாட்களுக்கு முன்பே குழந்தைகளின் மன்த்தில் கூடுகட்டத் தொடங்கிவிடும்.



தீபாவளி என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மட்டும்தான்.
 பெண்கள் பலகாரங்கள் செய்வதற்கு தானியங்களைத் தயார் செய்யத்தொடங்கி விடுவார்கள். முருக்கு, முட்டாய் உண்ட(லட்டுதான்),அதிரசம்,பொர்லங்கா உண்ட(பொருள்விளங்கா உருண்டை) என பாரம்பரிய பலகாரங்களுக்கான ஆயத்தப் பணிகளில்  ஈடுபடுவர். அரிசி களைந்து உலரவைப்பது பெண்கள் பணி அவற்றை அரிசி ஆலையில் அரைத்துக் கொண்டு வருவது ஆண்கள் பணி. பார்ப்பதற்கு ஆண்களுக்கு எளிதான பணிபோல் தோன்றும் ஆனால் அதுதான்  மலையை மடுவாக்குவதுவதுபோல். சரியான பதத்தில் அரைத்துக் கொண்டுவரவேண்டும்   வேண்டும் அதற்கு முன்பு ஆலையில் கேழ்வரகு கம்பு போன்ற தானியங்கள் அரைத்திருந்தால் முருக்கரிசி அரைக்கக்கூடாது (முருக்கு சிவப்பதோடு தின்பதற்குக் கடினமாக இருக்கும் என்பதால்)
பக்கத்து வீட்டில் பட்டாசு சத்தம் கேட்டால் நம் வீட்டு குழந்தை மனத்தில் ஏக்கம் வரக்கூடாது என்றுத்

தீபாவளி அன்றுதான் சிறப்பான உணவுகள் கிடைக்கும் அதிகாலை எழுந்து சுழியான் என்னும் இனிப்பு உருண்டை செய்து இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளையும் செய்து ஆவலாய் உண்ணும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். லட்டு அதிரசம், பொருள்விளங்கா உருண்டை, முருக்கு ஆகிய பலகாரங்கள் தீபாவளிக்கு தீபாவளி நிச்சயம் உண்டு.
தீபாவளி லேகியம் என்பது வழக்கத்திற்கு மாறாக சில சிறப்பு உணவுகளும் பலகாரங்களும் சாப்பிடுவதால் சீரண சிக்கலிருக்கும் என்பதால் சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய வற்றை இடித்துப் பொடியாக்கி நீரிலிட்டு வேக வைத்து நெய்யும் பனைவெல்லமும் கலந்து லேகியமாக்கி உண்பதுண்டு. இந்த லேகியமும் இன்று கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
 அன்று கிடைக்கும் என்பதால் தி

புத்தாடைக்காக தையல் கடையில் தவம் கிடப்பதும் பட்டாசு வாங்கிவரும் அப்பா எந்த பேருந்தில் வருவார் என்று ஏங்கிக் கிடந்ததும் அதிரசம் செய்வதற்காக வைத்திருக்கும் மாவை அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்து ருசிப்பதும் பாட்டிலில் ராக்கெட் வைத்து மேலெ சென்றதும் நிலவுக்கே சென்றதைப் போல் குதூகலித்ததும் ,பொட்டு வெடியை கூழாங்கல் வைத்து நசுக்குவதும்  வெடிக்காமல் கிடக்கும் வெடிகளின் மருந்தை சேகரித்து புதிய வெடி தயாரிப்பதும் வாணக்காரர்கள் தயாரித்த நாட்டு வெடி சத்ததிற்கு காதுகளை பொத்திக்கொள்பவர்களைப் பார்த்து ரசிப்பதும் இன்றைக்கு கிராமங்களில் கூட காணக் கிடைக்காத கால் நூற்றாண்டு கதைகளாகிவிட்டன.
நன்றி : நிலாப்பெண்ணே அக்டோபர் 2011

No comments:

Post a Comment