தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, January 18, 2012

தை ஏழாவது இதழ்

தை ஏழாவது இதழில் என் கவிதை


கனவுகள் கிளைத்த மரங்கள்
--------------------------------------------------

ஆல்
அரசு
வேம்பு
புன்னை
வாகை
எல்லா மரங்களையும்
வழிபாட்டின் பெயரால்
வளர்த்து சூழல் காத்த
வம்சா வழியினர்தான்...

வளர்க்கத் தொடங்கினோம்
தென்னை
மா
பலா
முந்திரி
தேக்கு
சந்தனம்
என
கனவுகள் கிளைத்து வளர்ந்தன
பணம் காய்க்கும் மரங்கள்
எல்லாம்
"தானே" சாய்ந்து
நொறுங்கிப் போயின
கற்பனைக் கோட்டைகள்.


Tuesday, January 3, 2012

பூமலை மணிவண்ணன் "விதைநெல்" நாடக நூல் வெளியீட்டு விழா


பூமலை மணிவண்ணன் "விதைநெல் "நாடக நூல் வெளியீட்டு விழா

நூல் : விதைநெல் (நாடகங்கள்)

ஆசிரியர் : பூமலை மணிவண்ணன்





நாள் : 08.01.2012 - ஞாயிறு - மாலை -4 - 6 மணி

இடம்: தொல்காப்பியர் அரங்கம், பெண்ணாடம்

தலைமை : சா.காள்மேகம்

வெளியிடுபவர் : திரு. என். ரங்கசாமி,   மாண்புமிகு முதலமைச்சர், புதுவை

முன்னிலை : திரு. இராஜவேலு, மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர், புதுவை

வரவேற்பு : க.இராமலிங்கம்

பெறுபவர் : சாரதம் பூமாலை

ஏற்புரை : பூமலை மணிவண்ணன்

தொகுப்பு : ப.கலைவாணன்

நன்றியுரை: செந்தமிழ்செல்வன்

நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மாலை துண்டு அணிவிப்பதைத் தவிர்த்து வெளியிடும் நூலை விலைக்கு வாங்கினால் அந்தத் தொகையில் இன்னொரு நூலை வெளியிடுவேன் என்ற வேண்டுகோளை நூலாசிரியர் அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின்அருகன் கவிதை நூல் வெளியீட்டு விழா


கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின்அருகன் கவிதை நூல் வெளியீட்டு விழா



நூல் : அருகன் (கவிதைகள்)

ஆசிரியர் : கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

நாள் : 04.01.2012 - புதன் - மாலை - 6 மணி

இடம்: குமார ராஜா முத்தையா அரங்கம்
செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி
எம்.ஆர்.சி.நகர், ராஜா அண்ணாமலைபுரம்
சென்னை - 28.

தலைமை : இந்திராபார்த்தசாரதி

வரவேற்பு : மனுஷ்யபுத்திரன்

பெறுபவர் : பால் சக்காரியா

கருத்துரை : கல்யாண்ஜி
ச.தமிழ்ச்செல்வன்
மினி கிருஷ்ணன்
பாரதி புத்திரன்

ஏற்புரை : தமிழச்சி தங்கபாண்டியன்

தொகுப்பு : பர்வீன் சுல்தானா