தை ஏழாவது இதழில் என் கவிதை
கனவுகள் கிளைத்த மரங்கள்
--------------------------------------------------
ஆல்
அரசு
வேம்பு
புன்னை
வாகை
எல்லா மரங்களையும்
வழிபாட்டின் பெயரால்
வளர்த்து சூழல் காத்த
வம்சா வழியினர்தான்...
வளர்க்கத் தொடங்கினோம்
தென்னை
மா
பலா
முந்திரி
தேக்கு
சந்தனம்
என
கனவுகள் கிளைத்து வளர்ந்தன
பணம் காய்க்கும் மரங்கள்
எல்லாம்
"தானே" சாய்ந்து
நொறுங்கிப் போயின
கற்பனைக் கோட்டைகள்.
கனவுகள் கிளைத்த மரங்கள்
--------------------------------------------------
ஆல்
அரசு
வேம்பு
புன்னை
வாகை
எல்லா மரங்களையும்
வழிபாட்டின் பெயரால்
வளர்த்து சூழல் காத்த
வம்சா வழியினர்தான்...
வளர்க்கத் தொடங்கினோம்
தென்னை
மா
பலா
முந்திரி
தேக்கு
சந்தனம்
என
கனவுகள் கிளைத்து வளர்ந்தன
பணம் காய்க்கும் மரங்கள்
எல்லாம்
"தானே" சாய்ந்து
நொறுங்கிப் போயின
கற்பனைக் கோட்டைகள்.