தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, October 2, 2012

சபர்மதி ஆற்றங்கரையில்..

                                            காந்தி ஆசிரம நுழைவாயில்
                                          காந்தி ஆசிரமம் முதன்மைக் கட்டடம்
                                                            சிறுவர்களுடன் காந்தி

                                                     சபர்மதி ஆர்ர்ங்கரையில்
                                     கை ராட்டையில் நூல் நூற்க முயற்சி                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தில் ஆசிரியர்களை கல்விச்சுற்றுலா அழைத்துச்சென்றனர்.அதில் மும்பை அகமதாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அகமதாபாத் நகரில் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள காந்தி ஆசிரமம் சென்றோம். அவரின் பல நினைவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக அந்த இடம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. காந்தி சிறப்பானதொரு இடத்தைத்தான் தேர்வு செய்துள்ளார்.விடுதலைப்போர் குறித்த முக்கிய முடிவுகள் பல அங்குதான் எடுக்கப்பத்துள்ளன. அவரின் அறை மூடிவைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டு மக்களின் மீது அவ்வளவு நம்பிக்கை. அவர்பயன்படுத்திய மரப்பொருள்களும் கை ராட்டையும் அங்கு உள்ளன. நூலகம் ஒன்றும் உள்ளது காந்தியின் அனித்து நூல்களும் அங்கு விற்கப்படுகின்றன. பலவற்றை வணிகமாக்கிவிட்டனர் அங்கு. நீண்ட நாட்களாக்ப்பார்க்க எண்ணிய இடம் இப்போதுதான் வாய்த்தது அதுவும் அரசாங்கத்தின் புண்ணியத்தில்.விடுதலைப்போராட்ட்வீரர் கடலூர் அஞ்சலையம்மாளின் மகள் லீலாவதி என்கிற அம்மாக்கண்ணு இங்குதான் வளர்ந்தாராம். காந்தி அவரைச் சிறு வயதில் தமிழ்கத்திலிருந்து அழைத்து வந்தார் என அவரின் குடும்பத்தினர் சொல்லக் கேட்டிருக்கிறேன். காந்தியுடனிருக்கும் குழந்தைகளில் அவர் எந்த குழந்தையோ.