தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, December 10, 2013

வியாபாரமாயணம் நாடகம்

முனைவர் மு.இராமசாமி அவர்களின் வியாபாரமாயணம் நாடகம் இன்று பர்த்தேன். எல்லாம் இன்று வியாபாரமாகிவிட்டன என்பதை கலை வடிவமாக்கியுள்ளார். விவசாயம் பொய்த்துவிட்டால் விவசாயிகள் வேறு தொழிலைப் பார்க்கலாம் என்று நம் பிரதமர் கூறினார். அந்த ஒற்றைச் சொல்லால் உறுவானதுதான் இந்த நாடகம். அப்படி விவசாயிகள் வேறு வேலைக்குச்செல்ல முடியுமா ? சென்றால் நாம் எதைச் சாப்பிடுவது? அதற்கு நம் அரசு கூறும் மாற்று வழி என்ன என்பதை எள்ளலோடு சொல்கிறது இந்த நாடகம். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பாருங்கள்.

Monday, December 9, 2013

வியாபாரமாயணம் நவீன நாடகம்



பேராசிரியர் மு.இராமசாமி அவர்களின் இயக்கத்தில் நவீன நாடகம் ’வியாபாரமாயணம்’

10/12/2013 செவ்வாய் மாலை 6.00 மணிக்கு விருத்தாசலம் மக்கள் மன்றத்தில்  நடைபெற உள்ளது.

நடிப்பு : மு.இராமசாமி
                ஆனந்த்சாமி

இசை: நெல்லை மணிகண்டன்

அரங்க நிர்வாகம் : சுதர்சன்

நெறியாள்கை : ராஜிவ்கிருஷ்ணன்

எழுத்தாக்கம் : மு.இராமசாமி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: எழுத்தாளர் இமையம், திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம் .

அனைவரும் வருக. கலை அமுதம் பருக.

Monday, November 11, 2013

நாட்டுப்புறவியல் கருத்தரங்கு

தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம்.
21 ஆவது தேசிய கருத்தரங்கு

நாள் ; 19,20 ஜனவரி 2014

இடம்: கர்நாடக நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் ( உலகின் முதல் நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம்)
கொடகொடி(Gotagoti)
ஷிக்கஒன்  வட்டம்(Shiggaon )
 ஹவெரி மாவட்டம் (Haveri)
கர்நாடகா-581 197

கருத்தரங்க பொருண்மை

மரபுவழி அறிவு
கிராமப்புற மற்றும் பழங்குடி மேலாண்மை
கிராமப்புற மற்றும் பழங்குடி பண்பாட்டு  உற்பத்தியும் விநியோக முறையும்
நிலைத்த வளர்ச்சியும் நாட்டுப்புறவியலும்.

கட்டுரை கட்டணம் அனுப்ப கடைசி நாள்
ஜனவரி 1 ,2014

முகவரி
முனைவர் டாக்டர் நசீம்தீன்
பொருளாளர்
77/13 பேராசிரியர் குடியிருப்பு
அம்மக்குளம் 5 ஆம் தெரு
போடிநாயக்கனூர் 625513
பேசி: 919488580085
மின்னஞ்சல்: nazeemdeen@gmail.com





Friday, November 1, 2013

சுழியான் சிறுகதை




               
                உருண்டி வைத்திருந்த சுழியான் உருண்டையை மைதாவில் நனைத்து எண்ணெயில்  போட்டபடி ,”தீவாளிக்காவது தலையில எண்ணெய் தேச்சு குளிக்கக் கூடாதா?” என்றாள்.
இதைக்கேட்ட அவள் கணவனுக்கு அவன் எட்டாவது படிக்கும் போது அவன் ஆசிரியர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. என் மருமொவ இருக்காள தீவுளிக்கு தீவுளி எண்ண தேச்சு குளிப்பா. என் மொவ இருக்காளே  சனியோ... சனி தான்  எண்ண தேச்சு குளிப்பா.  (அந்த தீவுளிக்கு தீவுளி என்று சொல்லும்போது தீபாவளி வாரம் ஒரு முறை வருவது போலவும் சனியோட சனி என்பது சனிக்கிழமை ஆண்டுக்கு ஒரு முறை வருவது போலவுமிருக்கும்) அவன் சிறு வயது நினைவுகளில் மூழ்கினான்.
அப்பா அதிகாலையிலேயே கீரனூர் செட்டியாரிடம் வாங்கிய நல்லெண்ணெயை தலையில் வழிய வழிய தேய்த்துவிட்டு புலிமார்க் சீயக்காயை டபராவில் கொட்டி வடிகஞ்சியை ஊற்றி களிம்பு போல் குழைத்து வென்னீரை தலையில் ஊற்றி ஒருமுறைக்கு இரு முறை சீயக்காயை நுரை வரும்படி தேய்த்து அலசி விடுவார். தலையோடு உடலும் மனமும் புத்துணர்வாயிருக்கும். (தீபவளியென்றில்லை ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய்க் குளியல்தான்)
மகன் , அம்மா  சொலவதைக் காதில் வாங்கிக்கொள்ளாதவனாய் ஷாம்ப்பு சாஷேயை எடுத்துக்கொண்டு குளிக்கக் கிளம்பினான்.
நான் சொல்றது காதுல விழலையா?
ஏம்மா  எதுக்கும்மா எண்ணெய் தேய்க்கணும் ஷாம்ப் போட்டு குளிச்சா என்ன?
அதிகாலை நல்லெண்ணெய் தேய்ச்சு குளிச்சா கங்கையில் குளிச்ச மாதிரி
அப்போ கடலை எண்ணெய் தேச்சு குளிச்சா காவிரியில குளிச்ச மாதிரியா? போம்மா என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் குளியலறைக்குள் நுழைந்தான்.
அவன் அப்பாவுக்கு மகனின் பகுத்தறிவை எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி.
மகன் குளிக்கச்சென்றதும் மீண்டும் இவன் சிறுவனானான். அம்மா  எப்போது எழுவாள் என்று தெரியாது. இவனை அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்புவார்கள் அப்போது அம்மா சுழியான் செய்துகொண்டிருப்பாள். அவள் செய்யும் சுழியான்  நாவில் நீர் சுரக்கச்செய்யும். படைக்காமல் உண்ணக்கூடாது என்பதால் எப்போது படைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பான். படைத்து முடித்ததும் புதுசட்டையைக் கூட சட்டைபண்ணாமல் சுழியானை எடுத்து சுவைப்பான். அது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் பலகாரம் என்பதால் எல்லோருக்குமே சுழியான் மீது ஒரு ஈர்ப்பு. ஏன் மற்ற நாட்களில் சுழியான் செய்வதில்லை என்பது இன்று வரை புரியாத புதிராய் உளது. வித விதமாய் கொல்லையில் என்ன விளைகிறதோ அதிலிருந்து தின் பண்டங்களை செய்து கொடுப்பாள் அம்மா. கம்பு அவல், சோளப்பொரி, அவிச்ச தட்டைப் பயிர், பச்சைப்பயிர் பால் கொழுக்கட்டை, வறுத்த கொள்ளு, எள்ளுருண்டை என்று செய்யும் அம்மா சுழியானை  ஏன் தீபாவளிக்கு மட்டுமே செய்கிறாள்என எண்ணிக்கொண்டிருந்தவனை  நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான் மகன்.
குளித்து தலையை துவட்டியபடி அடுப்பறையில் நுழைந்து சுழியானை எடுத்ததும் அம்மா பதறினாள். அய்யைய்யோ படைக்காம சாபிடக்கூடாதுடா என்று செல்லம் கொஞ்சினாள்.
யாருக்கு படைக்கணும் ? என்று கேட்டதும்
அவளுக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று புரியவில்லை நரகாசுரனுக்கா? கிருஷ்ணனுக்கா? என்று சந்தேகம். பொதுவாக சொல்லிவைப்போம் என்று சாமிக்குதான் என்றாள்.
சாமிக்குதான... அப்ப சரி என்று சுழியானைக்கையிலெடுத்தான்.
என்ன... தம்பி? என்று செல்லமாகக் கடிந்துகொண்டாள்.
ஏம்மா ,”நீதான என் சாமி சாப்புடுப்பான்னுகொஞ்சுவ. அப்ப நாந்தான ஒனக்கு சாமி என்றவன்
இந்த சுழியான் எப்படிம்மா செய்றீங்க?
இனிப்புப் பூரணத்த உள்ள வச்சு மைதாவக் கரைச்சு அதுல பூரணத்த முக்கிஎடுத்து எண்ணெயில போட்டா சுழியான் ரெடி”, என்றாள் உற்சாகமாக. இந்த மைதா மாவு ,உருண்டைய உடையாம கெட்டியா புடிச்சுக்கும்.
இந்த உருண்டையைப் பாத்தா மைதாமவுல சிக்கிகிட்டு முழிக்கிற மாதிரியே இருக்கு. நீ அப்பாகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிற மாதிரி” .
அவளுக்கு திக்கென்று ஆனது நம்ம மகனா இப்படி பேசுகிறான் என்று. சற்று சுதாரித்துக்கொண்டு ருசியா இருக்கா இல்லையா?
இருக்கு.. இருக்கு.. என்று வெளியில் வந்தான்.
பட்டாசு சத்தமும் புகை மூட்டமும் காதையும் மூக்கையும் அடைத்தன.
பட்டாசு வெடிக்கிற பழக்கம் சீனாவுல இருந்து நாம கத்துகிட்டதுன்னு யாரோ சொல்லக் கேட்டதா ஞாபகம். இந்த மக்கள் பழக்கங்கள் என்னும் மைதாவுக்குள் சிக்கிக்கொண்டு விழிக்கிறார்களோ என்று தோன்றியது.

நம் ஊரும் கூந்தன் குளம் போல பட்டாசு சத்தமில்லாமலிருந்தால் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான். நினைக்கவே மகிழ்ச்சியாய் இருந்தது .
அப்படி ஒரு தீபாவளிக்காக மனம் ஏங்கியது.

நன்றி : தமிழ்முரசு தீபாவளி சிறப்பிதழ்





Tuesday, July 23, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு விடை - 2013,தமிழ்

1.மதுரையை தென் தமிழ் மதுரை எனக்குறிப்பிடும் நூல்
B.மணிமேகலை

2.பதினெண் கீழ் கணக்கில் இடம்பெறும் அக நூல்கள்
C. 6

3 ‘.சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை’  இடம்பெரும் நூல்
B. மணிமேகலை

4. வைர வியாபாரி இடம்பெறும் நூல்
C. வளையாபதி

5 ‘பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்’ என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
D. குண்டலகேசி

11. உவமை தோன்றும் நிலைக்களன்
B. காதல்

12. பொறி நுதல் வியர்த்தல்
C. முதல்நிலை மெய்ப்பாடு

13.உவமப் போலி
D. ஐந்து

14.உள்ளுறை உவமத்தின் பயன்
A சுவை

15.தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்குஇவ்வடிகளில் அமைந்துள்ளது

16 “போர்க்குறிக்காயமே புகழின் காயம்….” என்று கூறிய கதாபாத்திரம்
C சீவக வழுதி

17.பவளக்கொடி நாடக ஆசிரியர்
D. சங்கரதாஸ் சுவாமிகள்

18.தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர்
B.பம்மல் சம்பந்த முதலியார்

19.வாசகர்தான் பனுவலுக்கான அர்த்தங்களை வெளிக்கொணர்கிறார்- என்று கூறும் கோட்பாடு
D.அமைப்பியல்

20 சிட்டுக்குருவி எனது பலகணியின் வழியே வரின்  யான் எனை மறந்து சிட்டாகவே மாறி   விடுகின்றேன் எனக் கூறிய கவிஞர்
********

21.புறப்பொருள்மாலை வெட்சி படலத்தின் ‘உண்டாட்டு ‘ எனப்படுவது
 C.கள் அருந்தி களிப்பது

22 வெட்சி படலத்தின் துடிநிலை என்று கூறப்படுவது
A குடிப்பழமையைப் புகழ்தல்

23 .கரந்தை பூ பூக்கும் காலம்

C. ஐப்பசி,கார்த்திகை

24.வஞ்சி மறவரின் போர்த்தொழிலைச் சிறப்பித்து கூறும் துறை
D. கொற்றவை நிலை

25.வட்கார் மேல் செல்வது
D. வஞ்சி

26.தாண்டக வேந்தர்
A. திருநாவுக்கரசர்

27.சைவத்திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளின் ஆசிரியர்
C. திருஞான சம்பந்தர்.

28.பன்னிரு ஆழ்வார்களில் கடவுளைப் பாடாது அடியாராம் நம்மாழ்வாரை பாடியது யார்?
A. மதுரகவி ஆழ்வார்

29.தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியர் பெயர் தருக
A.பொய்யாமொழிப் புலவர்

30.திருமந்தரத்தின் உட்பிரிவாக எத்தனைத் தந்திரங்க்கல் இடம்பெற்றுள்ளன
C.  9

31.கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள யாப்பு நூல்
D. யாப்பருங்கலக்காரிகை

32.அணியிலக்கணம் கூறும் நூல்களில் முதன்மையானது
A. தண்டியலங்காரம்

33.தண்டியலங்கார பொருளணியியலில் தன்மையணி முதல் பாவிக அணிவரை உள்ள மொத்த அணிகள்
C. 35

34.தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு இதில் இடம்பெறும் அணி
B. வேற்றுமை அணி

35. ஐந்திலக்கணம் கூறும் முதல் இலக்கண நூல்
A. வீர சோழியம்



36.பெரும்பொழுதின் வகைகள்
B. ஆறு வகைப்படும்

37. மல்கு கார் மாலை
C. முல்லைக்கு உரித்தே

38.முல்லைத் திணை பறை
 C. கோட்பறை  D.ஏற்றுப்பறை    ( சரியான விடை- ஏறுகோட் பறை )

39.அகப்பொருள் மெய்யுறு புணர்ச்சியின் உட்பிரிவுகள்
*******

40.களவிற்குரிய கிளவித்தொகைகள்
A.பதினேழு கிளவித் தொகைகள்

41. ஞாணபீட விருது பெற்ற புதினம்
D.சித்திரப்பாவை

42. வா.செ. குழந்தை சாமியின் சாகித்திய அகதமி விருது பெற்ற திறனாய்வு நூல்
B. வாளும் வள்ளுவம்

43.ஏறு தழுவுதலை கதைக்களமாக கொண்ட புதினம்
C. வாடிவாசல்

44.குடும்பத்தேர் சிறுகதையின் ஆசிரியர்
D. மெளனி

45. பொருத்துக
A. விந்தன்      -       I  கமலாவின் கல்யாணம்
B. கு.அழகிரிசாமி –      II அக்பர் சாஸ்திரி
C. கல்கி         -      III மவராசர்கள்
D தி.ஜானகிராமன் -     IV திரிபுரம்

B. III   IV    I  II

46.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்ததாக கருதப்படும் இடம்
B. மதுரை

47.ஐங்குறு நூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர்
C. பெருந்தேவனார்

48.பொருநராற்றுப்படை எம் மன்னனின் சிறப்பை பாடுகின்றது?
A கரிகால் சோழன்

49. சரியான விடையைத் தேர்ந்தெடு
  D.ஐந்தாம் பத்து – கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்


50.”ஆன்றோர் புகழ்ந்த ஆறிவினிற் ரெறிந்து  சான்றோரு ரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒரு பது பாட்டும்”  எனக்கூறியவர்
A. நச்சினார்க்கினியர்

51.தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
C.வீரமாமுனிவர்

52.பாரதியாரின் சின்ன சங்க்கரன் கதை என்னும் நூல்
B. உரைநடை நூல்

53.வரலாற்றுக் களஞ்சியம் என்று யாருடைய நாட்குறிப்பை குறிப்பிடுவர்
A ஆனந்தரங்கம் பிள்ளை

54. காட்டு வாத்து தொகுப்பினை வெளியிட்ட பதிப்பகம்
C.எழுத்து

55.உ.வே. சாமிநாதையர் முதன் முதலில் பதிப்பித்த  நூல்
C. சீவகசிந்தமணி

56.வைகறை விடியல்
C. மருதத் திணக்குரிய காலம்

57.இருத்தலின் உரிப்பொருளுக்குரிய திணை
C.முல்லைத்திணை

58. மருத நில தலை மக்கட்பெயர்
A. ஊரன், மகிழ்நன்

59. முல்லைத் திணைக்குரிய தெய்வம்
B. கண்ணன்

60. மருதத் திணக்குரிய பூ
C. தாமரை

66. உழவர்களின் வாழ்வியலைக் கூறும் சிற்றிலக்கியம்
A பள்ளு

67.பிள்ளைத்தமிழ் முதலாவதாக எப் பருவம் அமைகிறது
C. காப்பு பருவம்

68.முதலாழ்வார்களின் எண்ணிக்கை
D 3

69 “.கொல்லா விரதம் குவலயமெல்லா மோங்க  ……. இச்சை பராபரமே” என்று உரைத்தவர் யார்?
A . தாயுமானவர்

70. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் பெயர் தருக
C. திரிகூட ராசப்ப கவிராயர்

76. தமிழ் மொழி உயர் தனிச்செம்மொழி என்று முதன் முதலில் கூறியவர்
C. பரிதிமாற்கலைஞர்

77.தொல்காப்பியர் சுட்டும் உரசொலிகள்
D. ர, ழ

78 என் என்னும் சொல் யார் காலத்தில் அன் என்று மாறியது ?
*****

79. முதன் முதலாக ‘ தமிழன்’ என்ற சொல்லாட்சி காணப்படும் இலக்கியம்
C. அப்பர் தேவாரம்


80 எந்த அளபெடை சோழர் காலத் தமிழில் காரணவினை காட்டும் உருபாக இருந்தது
*****
86.அவர் வந்தார் என ஒருவரை மட்டும் குறிப்பது
B. பால் வழுவமைதி

82.துஞ்சினார் என்று செத்தாரைக் குறிப்பது
A மங்கல வழக்கு

88. அண்ணாக் கயிறு என்பது
C. அரைஞான் கயிறு

89 தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கடன் வாங்கப்பெற்ற சொற்கள்
A .ஓலை,கறி,காசு தேக்கு

90. BICYCLE  எனதன் கலைச்சொல்லாக்கம்
C .ஈருருளி

91.ஒலியை ஆராயும் முறையை எத்தனைப் பிரிவாக வகுக்கின்றனர்

97. அரேபியா எகிப்து போன்ற பகுதிகளில் பேசப்படும் மொழியினம்
D. செமிட்டிக் இனம்

98.குவி மொழி எந்த மானிலத்தில் பேசப்படுகின்றது ?
A. ஒரிஷா

99.திராவிட மொழிகளின் திணை பால் பாகுபாடு ஸிறந்தது என்று கூறியவர்
C. கால்டுவெல்

100.’ தமிழ் மொழி மிக்க பழைய வரலாறு உடையதாகும்’’ என்று உரைத்தவர்
A. தீட்சிதர்



106 ஒலி வடிவிலும் வரி வடிவிலும் அமைந்த எழுத்துக்களின் தனித்தன்மையை விளக்குவது
C. நூன் மரபு

107. சகார ஞகாரம் பிறப்பு
B.இடைநா அண்ணம்

108 .கி.பி. 17. ஆம் நூற்றாண்டு சொல்லிலக்கண நூல்
A. பிரயோக விவேகம்

109. சொல்லும் பொருளும் ஒரு தாளின் இரண்டு பக்கம் போன்றது என்று கூறியவர்
******

110 யாப்பிலக்கண கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுவது
A.யாப்பருங்கலக்காரிகை

111. கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம்
A.நீதி நூல் காலம்

112. காப்பிய விதிகளைக்கூறும் இலக்கண நூல்
A. தண்டியலங்காரம்

113. உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் நீதி நூல்
D. முதுமொழிக்காஞ்சி

114. இலத்தின் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர்
 C வீரமாமுனிவர்

115. புகார்க்காண்டத்தின் இறுதிக்காதை
A. நாடுகாண் காதை

116.ஆதி நிகண்டு என அழைக்கப் பெறுவது
 C. திவாகர நிகண்டு

117.கம்பராமாயணம் நூலுக்கு கம்பர் சூட்டிய பெயர்
 A.இராமாவதாரம்

118.வினாவிடைவடிவில் அமைந்த இஸ்லாமிய இலக்கியம்
D. மசாலா

119. உடம்பார் அழியின் உயிரால் அழிவர்- யாருடைய கூற்று
C. திருமூலர்

120 விக்கிரம சோழன் உலாவின் ஆசிரியர்
A. ஒட்டக்கூத்தர்

121. ஆற்றுப்படையில் அடியளவில் பெரிய நூல்
C. மலைபடுகடாம்

122 ‘வஞ்சி நெடும்பாட்டு ‘ என வழங்க்கப்பெறும் நூல்
B. பட்டினப்பாலை

123. வடக்கிருந்து உயிர் நீத்த சோழ மன்னன்
D. கோப்பெருஞ்சோழன்

124. சரியான விடை தேர்ந்தெடுக்க
D. பெருங்கடுங்கோ

125. நக்கீரர் பத்துப்பாட்டில் பாடிய நூல்கள்
B. திருமுருகாற்றுப்படை நெடுநல் வாடை

131. சொற்களை சிறந்த முறையில் வைப்பது வசனம். சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் வைப்பது கவிதை என்று கூறியவர்
C. கோல்ரிட்ஜ்

132.ஒவ்வொரு சொல்லையும் சுண்டிப்பார்த்து ஓசைநயம் செவ்வனே உள்ளதா என்று ஆராய்ந்து பயன்படுத்தும் கதையாசிரியர்
 D. ல.சா.ராமாமிர்தம்

133 நிஜ நாடகம் நிகழ்த்திய நவீன நாடகம்
 B.துர்க்கிர அவலம்

134.தொல்காப்பியத்தில் ஆய்தல் என்ற சொல்லுக்கு கூறப்படும் பொருள்
A. உள்ளதன் நுணுக்கம்

135.‘அர்த்தங்கள் மையம் இழந்தவை, நிலையற்றவை, ஒத்தி வைப்புக்க்ள்ளானவை ‘ என விளக்கிய கோட்பாடு
D. பின் அமைப்பியல்

141. கவிதை இலக்கியங்க்களில் பேரிலக்கியமாகத் திகழ்வது
A. காப்பியம்

142. மணநூல் என்று அழைக்கப்படுவது
D சீவகசிந்தாமணி

143. அடிகள் நீரே அருளுக என்ற கூற்றுக்கு உரியவர்
D. இளங்கோவடிகள்

144. மணிமேகலையால் யானைத்தீ பசி நோய் தீர்க்கப்பட்டவள்
D  காயச்சண்டிகை

145.குண்டலகேசிக்கு எதிராக தோன்றிய வாத நூல்
A. நீலகேசி



146. “ குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்” என  மான உணர்ச்சி மிகுந்த பாடலைப் பாடிய மன்னர்
A சேரமான் கணைக்கால் இரும்பொறை

147. பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” எனப் பாடியவர்
 C.கணியன் பூங்குன்றனார்

148. உவமையால் பெயர் பெற்றவர்
 D.கல்பொரு சிறு நுரையார்

149. கோப்பெருஞ்சோழனோடு பிசிராந்தையார் போல் நட்புக்கொண்ட மற்றொரு புலவர்
A. பொத்தியார்

150.” எத்திசை செல்லினும் அத்திசைச்சோறே” எனப் பாடிய புலவர் யார் ?
D. ஒளவையார்




குறிப்பு:  ****** இவ்விடைகளுக்கு பின்னர் விடைகள் அறிவிக்கப்படும்

தற்காலிக விடைக்குறிப்பு தங்களின் தகவலுக்காக TRB யின் விடக்குறிப்பே இறுதியானது

  தொடர்புக்கு 759899935

நன்றி : வேலன் தங்கவேல்http://thamaraithamil.blogspot.in/2013/07/trb-2013-pg-tamil-tentative-key-dated.html