தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, February 16, 2013

களம் புதிது கவிதை விருது 2012




விருது பெறுபவர் கவிஞர் தேவேந்திரபூபதி
வழங்குபவர் : கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
தலைமை : கவிஞர் கரிகாலன்
முன்னிலை : எழுத்தாளர் இமையம்
வரவேற்பு : முனைவர் இரத்தின புகழேந்தி

தேவேந்திர பூபதியின் Endless Noon நூல் வெளியீடு
வெளியிடுபவர் : து.சுகுமாறன் இணை ஆணையர் - வணிக வரிகள்
பெறுபவர்கள் : கவிஞர் தபசி, கவிஞர் சக்திஜோதி
திறனாய்வு : சுரேஷ்குமார இந்திரஜித், ரமேஷ் பிரேதன்

விருதுக்குழு உரை : கவிஞர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
தெவேந்திர பூபதியின் கவிதைகளை வாசிப்போர் : அமிர்தராசு, அசதா,ரவிசுப்ரமணியன்
நன்றியுரை : இளந்திரையன்
நிகழ்ச்சித்தொகுப்பு : க.கார்க்கி
நாள் :17/02/2013 ஞாயிறு மாலை 4.30
மக்கள் மன்றம் , விருத்தாசலம்.

Saturday, February 9, 2013

எருமனூர் பள்ளியில் இலக்கியமன்ற விழா





 எருமனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியமன்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை ஏற்றார். இலக்கியமன்ற செயலர் இளம்பரிதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முனைவர் இரத்தின புகழேந்தி கலந்துகொண்டு வாய்மொழி இலக்கியங்கள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழக நாட்டுப்புற மக்களின் உணவுமுறைகளும் பழக்க வழக்கங்களும் என்னும் நூல் பள்ளி நூலகத்திற்குப் பரிசளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் லெனின், கோசலா, கிரிஜா ஆகியோர் பாடல்கள் கதைகள் விடுகதைகள் ஆகியவற்றை வழங்கினர்.  ஆசிரியர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஆசிரியர் கருணாநிதி நன்றி கூறினார்