தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, April 5, 2013

பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வில் குழப்பம்



நேற்று  (5/4/2013)  நடைபெற்ற  10 ஆம் வகுப்பு கணிதப் பொதுத்தேர்வு வினாத்தாள்
அரசு வெளியிட்ட வினாத்தாள் வடிவமைப்பை மீறி (BLUE PRINT) வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அட்டவணை அம்மீறல் குறித்த விவரங்களைத் தெளிவாக விளக்குகிறது.

அலகு
வினாத்தாள் வடிவமைப்பின்படி கேட்கப்பட
வேண்டிய 5மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை
வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள 5மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை
மீறல்/குழப்பம்  பற்றிய குறிப்பு
தொடர்களும் தொடர் வரிசைகளும்
2
1
 5 மதிப்பெண் வினா ஒன்று கேட்கப்படாமல் விடப்பட்டுள்ளது
இயற்கணிதம்
3
2
5 மதிப்பெண் வினா ஒன்று கேட்கப்படாமல் விடப்பட்டுள்ளது
அணிகள்
1
2
5 மதிப்பெண் வினா ஒன்று கூடுதலாகக் கேட்கப்பட்டுள்ளது.
முக்கோணவியல்
1
2
5 மதிப்பெண் வினா ஒன்று கூடுதலாகக் கேட்கப்பட்டுள்ளது.
Ø  இதுமட்டுமின்றி  கணங்களும் சார்புகளும் என்ற முதல் அலகில் கணங்கள் பகுதி புறக்கணிக்கப்பட்டு இரு 5 மதிப்பெண் வினாக்களும் சார்புகள் பகுதியிலிருந்தே கேட்கப்பட்டுள்ளன.
Ø  மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் சவாலாக அமையும்படியும் வினாத்தாளை வடிவமைத்து ஒவ்வொரு மாணவருக்கும் 20 மதிப்பெண்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது
Ø  வினாத்தாள் வடிவமைப்பின் படி மிகவும் கடினமான வினாக்கள் 12% மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் . மாறாக 40% அளவுக்கு கடினமான வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Ø  அரசுப்பள்ளி,கிராமப்புற  மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை பாதிக்கும் வண்ணம்  இவ்வினாத்தாள் அமைந்துள்ளது.
Ø  மேலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.
Ø  இரு மதிப்பெண் வினாக்களுள் 5 வினாக்கள் வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரிய வினாக்களாக அமைக்கப்பட்டுள்ளன.
Ø  எனவே மாணவர்களின் எதிர்கால நலன் கருதி குறைந்த்து 25 மதிப்பெண்களாவது கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும்  அல்லது மறுதேர்வு நடத்தப்படவேண்டும் .

Ø  ஏற்கனவே மாணவர்களுக்கு கணிதம் என்றாலே கசப்பான பாடம் என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்துவதாக இந்த வினாத்தாள் அமைந்துவிட்டது வேதனைக்குரியதாகும்.

Ø  அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் இவற்றை கவனிப்பாரா? தவறான வினாத்தாள் வடிவமைத்தமைத்தது குறித்து விசாரணை நடத்தப்படுமா? மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களின் அச்சமும் குழப்பமும் நீக்கப்படுமா?

இரத்தின புகழேந்தி,
தீ.கோ. நாராயணசாமி