நேற்று (5/4/2013)
நடைபெற்ற 10 ஆம் வகுப்பு கணிதப் பொதுத்தேர்வு வினாத்தாள்
அரசு
வெளியிட்ட வினாத்தாள் வடிவமைப்பை மீறி (BLUE PRINT) வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட
அட்டவணை அம்மீறல் குறித்த விவரங்களைத் தெளிவாக விளக்குகிறது.
அலகு
|
வினாத்தாள்
வடிவமைப்பின்படி கேட்கப்பட
வேண்டிய
5மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை
|
வினாத்தாளில்
கேட்கப்பட்டுள்ள 5மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை
|
மீறல்/குழப்பம் பற்றிய குறிப்பு
|
தொடர்களும்
தொடர் வரிசைகளும்
|
2
|
1
|
5 மதிப்பெண் வினா ஒன்று கேட்கப்படாமல் விடப்பட்டுள்ளது
|
இயற்கணிதம்
|
3
|
2
|
5 மதிப்பெண்
வினா ஒன்று கேட்கப்படாமல் விடப்பட்டுள்ளது
|
அணிகள்
|
1
|
2
|
5 மதிப்பெண்
வினா ஒன்று கூடுதலாகக் கேட்கப்பட்டுள்ளது.
|
முக்கோணவியல்
|
1
|
2
|
5 மதிப்பெண்
வினா ஒன்று கூடுதலாகக் கேட்கப்பட்டுள்ளது.
|
Ø இதுமட்டுமின்றி
கணங்களும் சார்புகளும் என்ற முதல் அலகில் கணங்கள்
பகுதி புறக்கணிக்கப்பட்டு இரு 5 மதிப்பெண் வினாக்களும் சார்புகள் பகுதியிலிருந்தே கேட்கப்பட்டுள்ளன.
Ø மாணவர்களுக்கு குழப்பத்தை
ஏற்படுத்தும் வகையிலும் சவாலாக அமையும்படியும் வினாத்தாளை வடிவமைத்து ஒவ்வொரு மாணவருக்கும்
20 மதிப்பெண்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது
Ø வினாத்தாள் வடிவமைப்பின்
படி மிகவும் கடினமான வினாக்கள் 12% மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் . மாறாக 40% அளவுக்கு
கடினமான வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Ø அரசுப்பள்ளி,கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை பாதிக்கும் வண்ணம்
இவ்வினாத்தாள் அமைந்துள்ளது.
Ø மேலும் 100க்கு
100 மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.
Ø இரு மதிப்பெண் வினாக்களுள் 5
வினாக்கள் வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரிய வினாக்களாக அமைக்கப்பட்டுள்ளன.
Ø எனவே மாணவர்களின் எதிர்கால நலன்
கருதி குறைந்த்து 25 மதிப்பெண்களாவது கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்தப்படவேண்டும் .
Ø ஏற்கனவே மாணவர்களுக்கு கணிதம்
என்றாலே கசப்பான பாடம் என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்துவதாக இந்த வினாத்தாள் அமைந்துவிட்டது
வேதனைக்குரியதாகும்.
Ø அரசுத்தேர்வுத்துறை இயக்குநர்
இவற்றை கவனிப்பாரா? தவறான வினாத்தாள் வடிவமைத்தமைத்தது குறித்து விசாரணை நடத்தப்படுமா?
மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களின் அச்சமும் குழப்பமும் நீக்கப்படுமா?
இரத்தின
புகழேந்தி,
தீ.கோ.
நாராயணசாமி
No comments:
Post a Comment