தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, May 14, 2017

தமிழர் ஓவியம் குறித்த பன்னாட்டுக்கருத்தரங்கு

தமிழர் ஓவியம் குறித்த பன்னாட்டுக்கருத்தரங்கு







சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் கற்க அறக்கட்டளை மற்றும் கானல்வரி கலை இலக்கிய பண்பாட்டு இயக்கமும் இணைந்து தமிழர் ஓவியம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு, நூல்வெளியீடு, சிறந்த ஓவியர்களுக்கு விருதுவழங்கும் விழா மற்றும் ஓவியக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகள் 14.05.2017 ஞாயிறு அன்று வடலூர் வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியல் நடைபெற்றன.
கருத்தரங்க தொடக்க விழாவுக்கு ஓ.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்து கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தமிழர் ஓவியம் என்னும் நூலை வெளியிட்டார். முதல்பிரதியை உலகத்தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். முன்னதாக கானல்வரி உறுப்பினர் முனைவர் இரா.செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் மா.சந்திரமூர்த்தி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரையர் கழகத் தலைவர் ராமானுஜம் காகிதம் பதிப்பகம் மனோபாரதி ஓவியர் தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
     அடுத்ததாக நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் செல்லம்மாள், ஓவியர் கோவிந்தன், துளசிராமன், ரமேஷ்பாபு, முனைவர் செந்தில்குமார் முனைவர் இரத்தின புகழேந்தி உள்ளிட்டோர் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தனர்.
மாலை சிறந்த ஓவியருக்கான கற்க அறக்கட்டளையின் கானல்வரி கலை விருது ஓவியர் நெய்வேலி கே. கோவிந்தனுக்கு வழங்க்ப்பட்டது. பாராட்டுப் பட்டையமும் பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. சிறந்த இளம் ஓவியருக்கான விருதும் ஐந்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் பராட்டுப்பட்டயமும் மன்னம்பாடி ஓவியர் தமிழரசனுக்கு வழங்கப்பட்டது. விருதினை அரசுத் துறை முன்னாள் செயலாளர் கி.தனவேல் இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார். பணமுடிப்பினை கற்க அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் தியாக இரமேஷ் அவர்களின் சார்பாக அவரின் சகோதரர் தியாக பாபு அவர்கள் வழங்கினார். விருது பெற்ற ஓவியர்களை கவிஞர் த.பழமலய், பண்ணுருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவரும் தாவரவியல் ஆய்வாளருமான பஞ்சவர்ணம் ஆகியோர் வாழ்த்தினர்.
ஓவியர்கள் தட்சணாமூர்த்தி, ஜேம்ஸ், பாலசுப்ரமணியன், கரோல், கோவிந்தன்,தமிழரசன் ஆகியோரின் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது.
உலகத்தமிழாராய்ச்சி நிறுவன நூலகர் முனைவர் பெருமாள்சாமி நிறைவுரையாற்றினார். கானல்வரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரத்தின புகழேந்தி நன்றியுரையாற்றினார்.


No comments:

Post a Comment