தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, April 17, 2015

தாலி அரசியல்



தாலி அரசியல் இன்று எல்லா ஊடகங்களிலும் படாத பாடு படுகிறது. தாலி குறித்து பல கருத்து வேறுபாடுகள் உண்டு. இது கொஞ்சம் மாறுபட்ட காட்சி. திராவிட முன்னேற்றக்கழகத்தை உயிரென மதிக்கும் மு.பட்டி சிற்றூரில் கவிஞர் முனைவர் பட்டி செங்குட்டுவன் அவர்களின் உறவினர்கள் தாலியில் உதயசூரியன் சின்னத்தை வடிவமைத்துள்ளனர். அந்த தாலியை பல பெண்கள் அணிந்துள்ளனர்.72 வயது அலமேலு அவர்கள் தனது தாலியில் உதயசூரியன் சின்னம் உள்ளதைக் காணலாம். நன்றி :டெக்கான் க்ரானிக்கல்

Wednesday, April 8, 2015

ஜெயகாந்தன் ஒரு சகாப்தம்



ஜெயகாந்தன் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக வலிமையான ஆளுமை. அவர் கூறும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தியவை. யாருக்கும் அஞ்சாமல் தன் மனத்தில் பட்டதை கூறும் இயல்புடைய படைப்பாளி. அவர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் காலம் உள்ளவரை வாழும்.
அவரைப்பற்றி சுருக்கமாக நினைவு கூர்ந்து அவரது மறைவுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ ( C. P. I ) -யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.

ஜெயகாந்தன்படைப்புகள்
தன் வரலாறு
  ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
  ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 )
  ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009)
 ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள்
வாழ்க்கை வரலாறு
  வாழ்விக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு    மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
 ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை  வரலாறு)
நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்
 வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
 கைவிலங்கு (ஜனவரி 1961)
 யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
 பிரம்ம உபதேசம் (மே 1963)
 பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
 கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
 பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
 கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
 சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
 ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
 ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
 கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
 ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
 பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
 எங்கெங்கு காணினும்... (மே 1979)
 ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
 கரிக்கோடுகள் (ஜூலை 1979)
 மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
 ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
 ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)
 பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
 அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
 இந்த நேரத்தில் இவள்... (1980)
 காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
 காரு (ஏப்ரல் 1981)
 ஆயுத பூசை (மார்ச் 1982)
 சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
 ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
 ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
 இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
 இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
 காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)
 கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
 அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)
 இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
 ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
 சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
 உன்னைப் போல் ஒருவன்
 ஹர ஹர சங்கர (2005)
 கண்ணன் (2011)
சிறுகதை தொகுப்புகள்
 ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
 இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
 தேவன் வருவாரா (1961)
 மாலை மயக்கம் (ஜனவரி 1962)
 யுகசந்தி (அக்டோபர் 1963)
 உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
 புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
 சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
 இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
 குருபீடம் (அக்டோபர் 1971)
 சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
 புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
 சுமைதாங்கி
 பொம்மை
பெற்ற விருதுகள்
 சாகித்திய அகாதமி விருது
 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது
 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது
 ரஷ்ய விருது 

Wednesday, April 1, 2015

விருத்தாசலத்தில் கவிதை நூல் அறிமுக விழா.




கவிஞர் கருணாகரசு எழுதிய நீ வைத்த மருதாணி கவிதை நூல் அறிமுக விழா விருத்தாசலத்தில் நடைபெற்றது.
விர்த்தாசலம் நகராட்சிப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கவிஞர் இரத்தின.புகழேந்தி தலைமை வகித்தார். கவிஞர் பட்டி.சு.செங்குட்டுவன், தலைமை ஆசிரியர் வீரராகவன், ரோட்டரி சங்க தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் சுந்தரபாண்டியன் வரவேற்புரையாற்றினார் .
தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் கவிதை நூலை வெளியிட கருவேப்பிலங்குறிச்சி அரிமா சங்க செயலர் வெற்றிவேல் பெற்றுக்கொண்டார்.
தமிழ் படைப்பாளிகள் பேரியக்க மாநில செயலாளர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன், மாநில பொருளாளர் கவிஞர் ஆறு.இளங்கோவன், கவிஞர்கள் புதூர் சாமி, பூவனூர் அரங்கநாதன் கவிதாயினி சிலம்புச்செல்வி ஆகியோர் கவிதை நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார்கள்.
எழுத்தாளர்கள் ஒகளூர் நிலவன், ஓவியர் மோகன், பழமலை, டேனியல் ரொசாரியோ, இளம்பரிதி , பாரதிரெங்கன் , செல்வமணி, செல்வசுப்ரமனியன் , ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் இரத்தின.புகழேந்திக்கு மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில் 'இலக்கியச்சுடர் ' பட்டம் வழங்கப்பட்டது.
இறுதியாக எழுத்தாளர் மலர்தாசன் நன்றி கூறினார் .